முகப்பு
தமிழ்நாடு

மணமான 2 மாதத்திலேயே புதுமணப்பெண் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை

மணப்பாறையில் திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலையில் புதுமணப்பெண் ஒருவர் மர்மமாற முறையில் தற்கொலை செய்துகொண்டார்.

Updated On : 12 செப்டம்பர், 2016 at 6:26 PM
பகிர்:

மணப்பாறையில் திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலையில் புதுமணப்பெண் ஒருவர் மர்மமாற முறையில் தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி அருகேயுள்ள பாம்பாட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சிவபாலன். தையற்கலைஞர். இவருக்கும் தவளைவீரன்பட்டியைச் சேர்ந்த பூவரசி(20), என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த பூவரசி தன்மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகின்றது.

ஆனால் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக தந்தை சுப்பிரமணி போலீஸில் புகார் செய்துள்ளார், அதன்பேரில், வையம்பட்டி போலீஸôர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் ( ஆர்.டி.ஓ.) ராஜராஜன் தனிவிசாரணை மேற்கொண்டு வருகிறார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.