சிறப்பாகச் செயல்படுகிறது தேர்தல் ஆணையம்
ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம் சிறப்பாகச் செயல்படுவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடுசிறப்பாகச் செயல்படுகிறது தேர்தல் ஆணையம்
ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம் சிறப்பாகச் செயல்படுவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம் சிறப்பாகச் செயல்படுவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருவொற்றியூரில் திங்கள்கிழமை மீனவர் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அவர் பேசியது: ஆர்.கே.நகர் தேர்தலில் தேர்தல் ஆணையம் சிறப்பாகச் செயல்படுவது பாராட்டுக்குரியது. நாம் ஒருசிலரை மாற்றச் சொன்னோம். அவர்கள் 30 பேரை மாற்றி உள்ளனர். இது நமக்குக் கிடைத்த முதல் வெற்றி.
2016-ஆம் ஆண்டு இதே போல் தேர்தல் நடத்தி இருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்கும். இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணியினரும் டெபாசிட் பெற முடியாது. இனிவரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதே நிலைதான் ஏற்படும். இரண்டு அணியினரும் ஓரணியாக இருந்து ஆட்சி செய்தபோது மக்களுக்கும், மீனவர்களுக்கும் எந்தவித வளர்ச்சிப் பணிகளையும் செய்து கொடுக்கவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் இருவர் மீதும் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்றார்.