ஆர்.கே.நகர் தேர்தலுக்கு தடை: உயர் நீதிமன்றத்தில் 'டிராபிக்' ராமசாமி முறையீடு !
வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தேர்தலுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி முறையீடு செய்துள்ளார்.
தமிழ்நாடுஆர்.கே.நகர் தேர்தலுக்கு தடை: உயர் நீதிமன்றத்தில் 'டிராபிக்' ராமசாமி முறையீடு !
வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தேர்தலுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி முறையீடு செய்துள்ளார்.
வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தேர்தலுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி முறையீடு செய்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி. இவர சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஒரு முறையீடு தாக்கல் செய்துள்ளார். அதில் வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்வது மிக அதிக அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற வாய்ப்புகள் குறைவு. எனவே தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அவரின் இந்த முறையீட்டை வழக்காக மாற்றி விசாரிக்க உயர் நீதிமன்றம் ஒத்துக் கொண்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.