சென்னை: தங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னைக்கு வர வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் குடுக்க முயற்சித்த வழக்கில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு நாளை தில்லி காவல் துறையினர் சம்மன் குடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில் தங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னைக்கு வர வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஐ.என்.எஸ்., சென்னை போர்க்கப்பலில் பயணிக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கட்சி வட்டாரங்களை மேற்கோள் காட்டி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி தலைமையகத்தில் இருந்து தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்றும் சென்னை வரும் எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசியல் சூழல் பற்றி சிறப்பு ஆலோசனை செய்யவும் வாய்ப்புகள் உள்ளது.