முகப்பு
தமிழ்நாடு

சுழலும் சிவப்பு விளக்கை அகற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது காரிலிருந்து சுழலும் சிவப்பு விளக்கை அகற்றினார். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:20 PM
பகிர்:

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது காரிலிருந்து சுழலும் சிவப்பு விளக்கை அகற்றினார். 

குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட மிகவும் முக்கிய பிரமுகர்களின் (விவிஐபிக்கள்) வாகனங்களில் வரும் மே மாதம் 1-ஆம் தேதி முதல் சிவப்பு நிற சுழல் விளக்குகள் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது காரிலிருந்து சுழலும் சிவப்பு விளக்கை தானே அகற்றினார். மத்திய அரசின் முடிவை தொடர்ந்து சுழலும் விளக்கை அகற்றியதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அமைச்சர்களும் சுழலும் சிவப்பு விளக்கை அகற்றுவார்கள். குடிமராமத்து பணிகளுக்காக 300 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். 

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் போன்ற அவசரகால மற்றும் நிவாரண சேவை வாகனங்கள் தவிர்த்து, பிற வாகனங்களில் சிவப்பு நிற சுழல் விளக்குகளை பயன்படுத்துவதற்கு மே மாதம் 1-ஆம் தேதி முதல் தடை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →