தமிழ்நாடு

இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடத்த ஓ.பி.எஸ் அணியின் எழுவர்  குழு அறிவிப்பு!

DIN

சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் அணி சார்பாக ஏழு பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முனுசாமி, அதிமுக தொண்டர்கள் மற்றும் நாட்டின் நலன் கருதி இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அதிமுக அம்மா அணி சார்பில் குழு அமைத்ததை அடுத்து, நாங்களும் பேச்சுவார்த்தைக்குக் குழு அமைப்போம் என்றும் அவர் கூறினார்.

குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது வெகு விரைவில் அறிவிக்கப்படும் என்றும், இன்று மாலைக்குள் குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதன்படி சற்று முன்பு பன்னீர்செல்வத்தின் அணி சார்பில் முன்னாள் கல்வி அமைச்சர் செம்மலை ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள தகவலை தெரிவித்தார்.

அதன்படி கே.பி.முனுசாமி தலைமையிலான இந்த குழுவில் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், மாஃபாபாண்டியராஜன், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.   

அறிவிப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், விரைவில் பேச்சுவார்தை துவங்கும் என்றும், நல்லதே நடக்கும் என்றும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT