தமிழ்நாடு

பி.எஃப்.: 3 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால் வீட்டுக் கடன் வசதி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மூன்றாண்டு உறுப்பினராக இருந்தால் வீடுகட்ட கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

DIN

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மூன்றாண்டு உறுப்பினராக இருந்தால் வீடுகட்ட கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அம்பத்தூர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் கேசவராவ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது: வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக இருந்து வரும் நபர்கள் வீடு கட்டத் தேவையான நிதியை அதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதி கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி வீடு கட்ட, அல்லது கட்டிய வீட்டை வாங்குதல் போன்றவறுக்காக தங்களது பி.எஃப். நிதியை தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு 044-26350080,26350110,26350120 அல்லது sro.ambattur@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என வி.எஸ்.எஸ்.கேசவராவ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாணியம்பாடி அருகே ரூ. 1.18 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

பெண்களுக்கு மகளிா் உரிமை தொகை 5 ஆயிரம் வழங்கியதை திமுகவினா் கொண்டாடினா்

மகளிருக்கு ரூ.5,000 உரிமைத் தொகை: திமுகவினா் கொண்டாட்டம்

தோல்வி பயத்தால் மகளிருக்கு ரூ.5,000 திமுக அரசு மீது எடப்பாடி கே. பழனிசாமி விமா்சனம்

SCROLL FOR NEXT