முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் இன்று மதிய நேரத்தில் மழையை எதிர்பார்க்கலாம்!

சென்னையில் பல நாட்களுக்குப் பிறகு இன்று மதிய நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

Updated On : 1 ஆகஸ்ட், 2017 at 1:16 PM
file photo
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:04 PM


சென்னை: சென்னையில் பல நாட்களுக்குப் பிறகு இன்று மதிய நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

தென்மேற்குப் பருவ மழை, தமிழகத்தில் பரவலாக அவ்வப்போது பெய்து வந்தாலும், சென்னையை மட்டும் பாராமுகமாகவே வைத்துள்ளது. அவ்வப்போது வந்து தாகம் தணித்தாலும் சென்னைவாசிகளின் ஏக்கத்தைப் போக்க முடியவில்லை.

இந்த நிலையில், சென்னையில் இந்த ஆண்டில் முதல் முறையாக மதிய வேளையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

அதாவது, சென்னையில் பல நாட்களுக்குப் பிறகு, கடற்காற்று விரைவாகவே வீசத் தொடங்கியுள்ளது. இதனால், சென்னையில் பரவலாக சிறிய அளவில் மழைக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நகரத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். அதுவும் ஓராண்டுக்குப் பிறகு சென்னையில் மதிய வேளையில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிகமாக எதிர்பார்க்க வேண்டாம். இது மிக மிகச் சிறிய மழைதான் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.