முகப்பு
தமிழ்நாடு

டிடிவி தினகரனின் அதிகாரத்தை கட்டுப்படுத்த நிர்வாகிகளுக்கு அதிகாரமில்லை: எம்எல்ஏ தங்கத்தமிழ்ச்செல்வன்

டிடிவி தினகரனின் அதிகாரத்தை கட்டுப்படுத்த கட்சி நிர்வாகிகள் 75 பேருக்கு அதிகாரமில்லை என்று எம்எல்ஏ தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

டிடிவி தினகரனின் அதிகாரத்தை கட்டுப்படுத்த கட்சி நிர்வாகிகள் 75 பேருக்கு அதிகாரமில்லை என்று எம்எல்ஏ தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 

அதிமுக துணைப் பொது செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் என எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதுகுறித்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கத்தமிழ்ச்செல்வன் கூறுகையில், 
சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணை பொதுச் செயலாளருக்கு நிர்வாகிகளை நியமிக்க உரிமை உண்டு. அணிகள் இணைந்தால் விலகி கொள்வேன் என டிடிவி தினகரன் கூறியது உண்மை.  

3, 500 பொதுக்குழு உறுப்பினர்களை சேர்க்காமல் 75பேரை வைத்து ஈபிஎஸ் அணி முடிவெடுத்துள்ளது. தினகரனின் அதிகாரத்தை கட்டுப்படுத்த கட்சி நிர்வாகிகள் 75 பேருக்கு அதிகாரமில்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →