ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளையும் அரசுடமையாக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
முதல்வர் பழனிசாமி உட்பட அனைவரும் சிறந்த நடிகர்களே, நாடகத்தை இயக்குவது மத்திய அரசு. ஆளும் கட்சியின் பலவீனத்தால் தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளும் பறிபோகின்றன.
போயஸ் தோட்ட இல்லம் மட்டுமின்றி ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளையும் அரசுடமையாக்க வேண்டும். எதிலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மத்திய அரசு நீட் தீர்ப்பை மட்டும் மதிப்பது ஏன்?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
44 ஆண்டுகளாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.