தமிழ்நாடு

அண்ணாவின் 48ஆவது நினைவு தினம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

தினமணி

பேரறிஞர் அண்ணாவின் 48ஆவது நினைவு தினத்தையொட்டி திமுகவினர் பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 48ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர் அமைதிப் பேரணி மேற்கொண்டனர். இந்தப் பேரணி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முடிவடைந்தது. பேரணியில், துரைமுருகன், ஆ. ராசா, தயாநிதி மாறன், பி.கே. சேகர்பாபு, ஜெ. அன்பழகன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  

அதைத்தொடர்ந்து அண்ணா நினைவிடத்தில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT