தமிழ்நாடு

கடலில் படகு கவிழ்ந்து மீனவர் சாவு

DIN

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தார்.
சிதம்பரம் அருகே கடலோர மீனவ கிராமமான புதுக்குப்பத்திலிருந்து ஆறுமுகம் (36) உள்ளிட்ட 5 மீனவர்கள் சனிக்கிழமை காலை மீன் பிடிக்க படகில் கடலுக்குச் சென்றனர்.
முகத்துவாரம் அருகே சென்றபோது மீன்பிடி தளத்தின் சிமென்ட் காரை மீது படகு மோதி கவிழ்ந்தது. அப்போது, ஆறுமுகம் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மற்ற 4 பேரும் நீச்சலடித்து, ஆறுமுகத்தின் சடலத்தை மீட்டு கரை திரும்பினர். சம்பவம் குறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாய் சுதர்ஷன், ஷாருக்கான் அதிரடி: பெங்களூருவுக்கு 201 ரன்கள் இலக்கு!

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

SCROLL FOR NEXT