முகப்பு
தமிழ்நாடு

ஆளுநரை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் பன்னீர்செல்வம்! 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் பன்னனீர்செல்வம் புறப்பட்டு சென்றார்.  

Updated On : 9 பிப்ரவரி, 2017 at 4:38 PM
பகிர்:

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் பன்னனீர்செல்வம் புறப்பட்டு சென்றார்.  

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திடச் செய்தார் என்று நேற்று முன்தினம் இரவு  முதல்வர் பன்னனீர்செல்வம் பேட்டியளித்தார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசியல் சூழல் பரப்பானது.

இந்நிலையில் மும்பையில் இருந்த தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மதியம் 3.30 மணி அளவில் சென்னை வந்தடைந்தார். அவர் முதல்வர் பன்னீர்செல்வத்தை மாலை 5 மணியளவில் சந்திப்பார் என்று முதலில் தகவல் வெளியானது. 

Advertisement

இந்நிலையில் முதல்வர் பன்னீர்செல்வம் தன்னுடைய அடையார் கிரீன்வேஸ் சாலை இல்லத்திலிருந்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார்.   அவருடன் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனும் உடன் சென்றார் என்று தெரிகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.