சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள இல்லத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் மதுசூதனன்.
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்பான சம்பவங்களுக்கு மத்தியில் அதிமுக அவைத்தலைவராக இருந்து வரும் மதுசூதனனே பன்னீர்செல்வம் இல்லத்திற்கு வருகை தந்தது நேரில் ஆதரவு தெரிவித்திருப்பதால் தமிழக அரசியலில் திடீர் திருப்பமும் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வருபவர்களும் பன்னீர்செல்வம் இல்லம் நோக்கி வருகை தருவார்கள் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.