தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தொடர வேண்டும்: ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி எம்.பி

DIN

சென்னை: முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தொடர வேண்டும் என அதிமுக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி தெரிவித்தார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி செய்தியாளர்களிடம்  கூறுகையில், ஜெயலலிதாவின் அம்மாவின் மறைவிற்கு பின் கட்சியை யார் வழிநடத்தப் போகிறார்கள் என அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் காத்திருந்தனர் ஜெயலலிதா மறைந்து 20 நாட்களுக்குள் அவர்களாகவே பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.
தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்து வந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டி பதவியிறக்கம் செய்து முதல்வராகும் முயற்சிகள் நடைபெற்றுள்ளது. இதனை 7 கோடி தமிழர்களும், ஓன்றரை கோடி அதிமுகவினரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே பதவியில் நீடிக்க வேண்டும், பணிகளை தொடரவேண்டும், அதிமுகவை வழி நடத்திச்செல்ல வேண்டும் என கோரி நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் எங்களது ஆதரவை தெரிவிக்க வந்தோம் என்று கூறினார்.
அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செங்குட்டுவன், சத்யபாமா, வனரோஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT