தமிழ்நாடு

எந்த கட்சியின் ஆதரவும் இல்லாமல் அம்மாவின் நல்லாட்சி தொடரும்: பன்னீர்செல்வம்

DIN


சென்னை: எந்த கட்சியின் ஆதரவும் இல்லாமல் தமிழகத்தில் அம்மாவின் நல்லாட்சி தொடரும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் கவனமாக உற்று நோக்கி வருகிறோம். சட்டம் - ஒழுங்கை காக்கும் வகையில் நம்முடைய நோக்கம் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டுவது நமது கடமை.

ஒரு வார காலமாக அனைத்து நிலைகளில் இருந்தும் ஊர்களில் இருந்தும் பொது மக்கள் இங்கு வந்து நல்லாதரவை தந்தீர்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எந்த கட்சியுமோ, யாருடைய ஆதரவுமோ இல்லாமல் தமிழகத்தில் அம்மாவின் நல்லாட்சி தொடரும் என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT