திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோரின் வீடுகளுக்கு செவ்வாய்க்கிழமை கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சொத்துக் குவிப்பு வழக்கை நீதிமன்றத்தில் தொடுத்தது திமுக என்பதால், தீர்ப்பு வெளியாகும் நேரத்தில் திமுகவினரின் வீடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லம், கீழ்ப்பாக்கத்தில் ஆஸ்பிரான் தோட்டத்தில் உள்ள பொதுச்செயலர் க.அன்பழகன் இல்லம்,ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கும் கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.