தமிழ்நாடு

எம்எல்ஏக்களை கடத்தியதாக சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு

DIN


சென்னை: அதிமுக எம்எல்ஏக்களை கடத்தியதாக, அக்கட்சியின் பொதுச் செயலர் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில் 2 பேர் மீதும் வழக்குப் பதிவாகியுள்ளது.

தம்மையும் பிற எம்எல்ஏக்களையும் சசிகலா உள்ளிட்டோர் கடத்திச் சென்றதாக கூவத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சசிகலா தரப்பினரின் கட்டுப்பாட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூவத்தூர் விடுதியில் இருந்து மாறு வேடத்தில் தப்பி வந்ததாகக் கூறி, பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏ சரவணன் இன்று இந்த புகாரைப் பதிவு செய்துள்ளார்.

கூவத்தூர் டிஎஸ்பி எட்வார்டு, கூவத்தூர் சொகுசு விடுதியில் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT