தமிழ்நாடு

பைக் மீது டிராக்டர் மோதல்: மருத்துவர் சாவு

DIN

விழுப்புரம் அருகே, பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் அரசு மருத்துவர் உயிரிழந்தார்.
திருச்சியைச் சேர்ந்த சந்திரகாசன் மகன் கௌதம புத்தா (28). எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.இவர், வியாழக்கிழமை பிற்பகல் விக்கிரவாண்டியிலிருந்து விழுப்புரத்துக்கு சென்னை- கும்பகோணம் சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
இவருடன், விழுப்புரம் அரசு மருத்துவமனை பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் சுந்தரராஜன் (31) வந்தார். கோலியனூர் கூட்டுச் சாலை முன்பாக பிள்ளையார்க்குப்பம் என்ற இடத்தில் வந்த போது, கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த மருத்துவர் கௌதம புத்தா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சுந்தரராஜன் பலத்த காயமடைந்தார்.
அங்கிருந்தவர்கள் சுந்தரராஜனை மீட்டு, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் சங்கர மடத்தில் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி: 350 இசைக் கலைஞா்கள் பங்கேற்பு

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

SCROLL FOR NEXT