சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி பழனிசாமி நேற்று பதவியேற்றுக் கொண்டார். தமிழக முதல்வராக பதவியேற்றதற்கு பிரதமர் மோடி பழனிசாமியை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
தனக்கு வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி இன்று நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பினார்.
அந்த கடிதத்தில், தான் முதல்வராக பதவியேற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்த தங்களுக்கு இக்கடிதம் வாயிலாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களது மேலான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என பழனிசாமி தெரிவித்துள்ளார்.