முகப்பு
தமிழ்நாடு

தமிழக உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தமிழக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்து வரும் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை வரும் ஜூன் மாதம்  வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 ஜனவரி, 2017 at 6:43 PM
பகிர்:

சென்னை: தமிழக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்து வரும் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை வரும் ஜூன் மாதம்  வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை கடந்த அக்டோபர் மாதம் நடத்த திட்டமிட்டு தேதிகளும் அறிவிக்கப்பட்டன. ஆனால் தேர்தல் தேதி அறிவிப்பில் விதிமுறைகள் பின்பற்றப்ப்படவில்லை என்று கூறி திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் காரணமாக தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனவே உள்ளாட்சிகளின் நிர்வாகத்தினை மேற்பார்வை செய்ய தனி அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அவர்களின் பதிவிக்காலம் நேற்றொரு (டிசம்பர் 31) முடிவடைந்த நிலையில், அவர்களின்பதவிக்காலத்தை வரும் ஜுன் மாதம் வரை நீட்டித்து  தமிழக அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.