எங்கள் அணியில் ஆறுகுட்டிக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டது: ஓ. பன்னீர்செல்வம்
எங்கள் அணியில் ஆறுகுட்டிக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டது என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
எங்கள் அணியில் ஆறுகுட்டிக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டது என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எம்எல்ஏ ஆறுகுட்டி எங்கள் அணிக்கு தானாகவே வந்தார், தானாகவே விலகியுள்ளார். எங்கள் அணியில் ஆறுகுட்டிக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டது.
கமல்ஹாசன் கருத்துக்கு மரியாதை தரும் வகையில் பதிலளிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னதாக நேற்று கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுகுட்டி ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.