மின்னணு குடும்ப அட்டைகள் ஒரு மாதத்துக்குள் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மின்னணு அட்டைகளை திருத்தும் பணிகள் நடைபெறுவதாகவும், இந்தப் பணிகளை நிறைவடைந்ததும் அவை முழுமையாக வழங்கப்படும் எனவும் உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டு மின்னணு குடும்ப அட்டைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விவரங்களைத் தமிழாக்கம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் ஓரிரு மாதங்களில் முடிக்கப்பட்டு அட்டைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.