முகப்பு
தீ விபத்தில் சேதமடைந்த கட்டடத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். உடன் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்
தமிழ்நாடு

சென்னை சில்க்ஸ் தீ விபத்து: கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கின

தியாகராய நகரில் தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கின.

தமிழ்நாடு

சென்னை சில்க்ஸ் தீ விபத்து: கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கின

தியாகராய நகரில் தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கின.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:39 PM
தீ விபத்தில் சேதமடைந்த கட்டடத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். உடன் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்
பகிர்:

தியாகராய நகரில் தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கின.
கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. கடந்த 2 நாள்களாக கட்டடத்தின் பெரும்பகுதியில் தீ அணைக்கப்பட்டாலும், தீப்பொறியினால் அவ்வப்போது தீப்பற்றி எரிகிறது. இதனால், கட்டடம் வலுவிழந்து காணப்படுகிறது. மேலும் எப்போது எந்த தளத்திலிருந்து கட்டுமானம் சரியும் எனும் சூழல் நிலவியது.
நண்பகல் 1 மணியிலிருந்து..: இதனால், சென்னை சில்க்ஸ் அடுக்குமாடி வணிக கட்டடத்தை இடிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, மாவட்ட நிர்வாகம், சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை, பேரிடர் மீட்புக்குழுவினர் ஆகியோர் சேர்ந்து கட்டடத்தை இடிக்கும் ஆயத்த பணிகளை நண்பகல் 1 மணியளவில் இருந்து தொடங்கினர். அதன்படி, சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலிருந்தும் தேக்கி வைக்கப்பட்ட கட்டட கழிவுப்பொருள்களை 150-க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு வரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
15 அடிக்கு சமநிலை மட்டம் உருவாக்க..: கட்டுமான கழிவுப்பொருள்கள் 15 அடியளவுக்கு கொட்டப்பட்டு, நிரப்பப்பட்டது. அதன்பிறகு, சமன்படுத்தி பின்னர் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கட்டடத்தை 3 ஜாகிராக் கட்டர் இயந்திரம் (காங்கிரிட் கட்டட சுவர்களை இடித்து கட்டடத்தின் உட்புறமாக கொட்டும் முறையில் செயல்படும் இயந்திரம்), துளையிடும் நவீன கருவி மூலம் நள்ளிரவுக்குப் பின்னர் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகள் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.
அதிக பிரகாசமுள்ள விளக்குகள்: அதுபோல், கட்டடத்தை சுற்றியும் 200க்கும் மேற்பட்ட அதிக பிரகாசம் தரும் விளக்குகள் பொருத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டடம் 3 நாள்களுக்குள் இடித்து முடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →