தமிழ்நாடு

நெய்வேலியில் தெர்மல் பவர் திட்டப் பணியின் போது விபத்து: 13 பேர் காயம்

நெய்வேலியில் தெர்மல் பவர் திட்டப் பணியின் போது ஆக்ஸிலரி பம்ப் வெடித்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

சீனிவாசன்

நெய்வேலி: நெய்வேலி நியூ தெர்மல் பவர் திட்டப் பணியின் போது ரூபிங் சென்டர் முட்டு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் தனியார் நிறுவனத்தின் மூலம் நியூ தெர்மல் பவர் திட்டப் பணியின் மூலம் சாம்பல் வெளியேற்றும் நிலையம் 40X14 மீட்டர் அளவில் 10 மீட்டர் உயரத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு 11 மணியளவில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 13 பேர் தரைத்தளத்தில் ஜல்லி போடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

பணி நிறைவுபெறும் நிலையில் இருந்தபோது இன்று அதிகாலை 6.30 மணியளவில் திடீரென ரூபிங் சென்டர் முட்டு சரிந்து விழுந்தது. இதில், சுமார் 15 அடி உயர்த்தில் பணியில் இருந்த 13 தொழிலாளர்கள் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்த வடமாநில தொழிலாளர்கள் 8 பேர் என்எல்சி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் சிகிச்சை முடிந்து அவர்களின் வசிப்பிடத்திற்கு திரும்பி உள்ளனர்.

பலத்த காயமடைந்த தங்கமணி, பழனிசாமி, பிரமோத்குமார் உள்ளிட்ட 3 பேரும் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் ஒருவர் மட்டும் காயமின்றி அதிரிஷ்டவசமாக உயிர்தப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபெட் வட்டி விகிதக் குறைப்பு நம்பிக்கையால் உச்சம் தொட்ட வெள்ளி விலை!

ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி வெண்கலம் வென்ற இந்தியா..! ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் 4-ஆவது பதக்கம்!

கல் நெஞ்சமல்ல பூ மஞ்சம்... டிம்பிள் ஹயாதி!

படையப்பா மறுவெளியீட்டு டிரைலர்!

அமைதிக்கான நோபல் வென்ற மச்சாடோ தலைமறைவு: விருதைப் பெற்ற மகள்! - என்ன நடந்தது?

SCROLL FOR NEXT