தமிழ்நாடு

ஜூன் 23-இல் அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்களுக்கான தேர்வு

DIN

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்களுக்கான தேர்வு, வரும் ஜூன் 23-ஆம் தேதி தாம்பரத்தில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அஞ்சல் ஆயுள் காப்பீடு, ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனை நேரடி முகவர் ஆகிய பணிகளுக்கான நேர்காணல், வரும் ஜூன் 23-ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பிளஸ் 2 அல்லது அதற்குச் சமமான கல்வித்தகுதியுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல், 5 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை உள்ள பகுதியில் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வி தகுதியுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கான வயது வரம்பு 18 லிருந்து 65 வரை.
வேலையில்லாத பட்டதாரிகள், சுயதொழில் புரியும் இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு குழுமத்தின் முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி, மகிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக் குழுக்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இந்த நேர்காணலில் பங்கேற்கலாம். அதேபோல், தொழில் ஆர்வம் கொண்ட அஞ்சல் துறை ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணிகளுக்கான நேர்காணல், தாம்பரம் அஞ்சல் துறை வட்டாரத்தின் மூத்த கண்காணிப்பாளர் அஞ்சலக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. நேர்காணலின் போது தங்களது கல்வித்தகுதி, இதர விவரங்கள் தொடர்பான சான்றிதழ்கள், புகைப்படம் 2 ஆகியவற்றை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT