முகப்பு
தமிழ்நாடு

இரட்டை இலை: ஓபிஎஸ் தரப்பில் கூடுதல் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல்

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விதித்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், ஓபிஎஸ் அணி தரப்பில் கூடுதல் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு

இரட்டை இலை: ஓபிஎஸ் தரப்பில் கூடுதல் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல்

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விதித்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், ஓபிஎஸ் அணி தரப்பில் கூடுதல் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:46 PM
பகிர்:


புது தில்லி: இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விதித்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், ஓபிஎஸ் அணி தரப்பில் கூடுதல் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடைசி நாளான இன்று ஓபிஎஸ் அணி தரப்பில் 20 ஆயிரம் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஓபிஎஸ் அணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த ஆவணங்களின் எண்ணிக்கை 3.80 லட்சமாக உயர்ந்துள்ளது.

அதிமுக தலைமைக்கு உரிமை கோரும் விவகாரத்தில் அஇஅதிமுக என்ற கட்சிப் பெயரையும் அதன் தேர்தல் சின்னமான இரட்டை இலையையும் மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பயன்படுத்தக் கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தெரிவித்தது. 

இதையடுத்து ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் தரப்பில் லட்சக்கணக்கான பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதற்கிடையே, டாக்டர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் அமைப்பாளர் தீபாவின் சார்பில், பேரவை தலைமை செய்தித் தொடர்பாளர் எஸ். பசும்பொன்பாண்டியன் தேர்தல் ஆணையத்தில் அதிமுகவுக்கு உரிமை கோரி பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'டாக்டர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் 55 ஆயிரம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளோம். மேலும் 50 முதல் 60 லட்சம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய ஒரு வார அவகாசம் வழங்குமாறு தேர்தல் ஆணையத்தை கோரியுள்ளோம்' என்றார்.

அதிமுகவுக்கு உரிமை கோரும் விவகாரத்தில் மதுசூதனன் தரப்பும், சசிகலா தரப்பும் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை (ஜூன் 16) வரை தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்துள்ளது. 

எனவே, கடைசி நாளான இன்று சசிகலா அணி சார்பில் கூடுதல் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும் என்று அதன் வழக்குரைஞர் ராகேஷ் சர்மா தெரிவித்திருந்தார். இதற்கிடையே ஓபிஎஸ் தரப்பில் கூடுதலாக பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →