தமிழ்நாடு

பெங்களூரு சிறையில் சசிகலா - தினகரன் மீண்டும் சந்திப்பு!

DIN

பெங்களூரு: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவை,அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேசினார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடந்து வருகிறது.அரசுக்கு எதிராக ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்களே வெளிநடப்பு செய்து வருகின்றனர். 

இந்த நிலையில்தான் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவை,அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேசினார்.அவருடன் அவரது மனைவி அனுராதா, உறவினரான மருத்துவர் வெங்கடேஷ் ஆகியொருமுடன் சென்றார்கள்.

முன்னதாக அதிமுக எம்.பியும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று காலை சசிகலாவை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT