முகப்பு
தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் அணியினர் மரியாதை

சென்னை மரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று காலை 9 மணியளவில் ஓபிஎஸ் அணியினர் மரியாதை

தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் அணியினர் மரியாதை

சென்னை மரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று காலை 9 மணியளவில் ஓபிஎஸ் அணியினர் மரியாதை

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:17 AM
பகிர்:

சென்னை மரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று காலை 9 மணியளவில் ஓபிஎஸ் அணியினர் மரியாதை செலுத்தினர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியினர் சார்பில் மதுசூதனன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

இதையடுத்து இன்று மதுசூதனன் வேட்புமனு தாக்கல் செய்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு வேட்புமனு தாக்கல் செய்ய ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு இன்று காலை 9 மணியளவில் வருகை தந்தனர்.

ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முன்னாள் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், செம்மலை, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் வருகை தந்து மரியாதை செலுத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →