டிடிவி தினகரன் வேட்பு மனு மீது திமுக வேட்பாளர் ஆட்சேபணை
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட டிடிவி தினகரன் தாக்கல் செய்த வேட்பு மனுவை ஏற்பதில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட டிடிவி தினகரன் தாக்கல் செய்த வேட்பு மனுவை ஏற்பதில் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர் மருது கணேஷ், தேர்தல் அதிகாரிகளிடம் ஆட்சேபணையைத் தெரிவித்துள்ளார். அதாவது, டிடிவி தினகரன் இந்திய குடிமகன் அல்ல என வாதாடியுள்ளார்.
மேலும், அன்னிய மோசடி வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டவர் என்றும், இதில் அவர் தண்டிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அபராதத் தொகை அதிகம் என்று கூறித் தான் தினகரன் சார்பில் முறையீடு செய்யப்பட்டிருப்பதாகவும், எனவே அவரது வேட்பு மனுவை நிராகரிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதனால், டிடிவி தினகரனின் வேட்பு மனுவை ஏற்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.