தமிழ்நாடு

ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விரைவில் வெளியீடு: தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தகவல்!

DIN

மதுரை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை  பெற்ற பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் விரைவில் வெளியிடப்படும் என்று டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும், கர்நாடக மாநில அதிமுக பொறுப்பாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடக்கும் கட்சி நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரும், கர்நாடக மாநில அதிமுக பொறுப்பாளருமான புகழேந்தி வந்திருந்தார். அங்கே அவர் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது கூறியதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை  பெற்ற பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்படவில்லை என்றுதான் புகார் தெரிவிக்கிறார்கள். கொஞ்சம் பொறுத்திருங்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சையின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் விரைவில் வெளியிடப்படும். நாங்கள் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அது மட்டும் இல்ல, புகைப்படங்கள் வெளியாகும் பொழுது மொத்த உண்மையும் வெளிவரும். பலரது முகத்திரை கிழியும்.

இவ்வாறு புகழேந்தி தன்னுடைய பேட்டியின் பொழுது தெரிவித்தார்,  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT