சூர்யா உள்ளிட்ட 8 நடிகர், நடிகைகளுக்கு நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட்!
2009 ஆம் ஆண்டு பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகர் சூர்யாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:05 PM
நீலகிரி: 2009 ஆம் ஆண்டு பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகர் சூர்யாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சூர்யா தவிர, நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சேரன், விவேக், அருண் விஜய், நடிகை ஸ்ரீப்ரியா ஆகியோருக்கும் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு ஆஜராகாததால் நீலகிரி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement