சென்னை: சேகர் ரெட்டிக்கு சொந்தமான ரூ.8.57 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தொழிலதிபர் ஜெ.சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் வீட்டில், கடந்த ஆண்டு 2016-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ரூ.147 கோடி பணம், 177 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. அதில், தற்போது நடத்திய சோதனையில் 30 கிலோ தங்கத்தை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.