முகப்பு
தமிழ்நாடு

கரண்ட் பெட்டியில் கை வைக்கும் வேலையைச் செய்கிறார் கமல்: எஸ்.வி.சேகர் கடும் தாக்கு! 

தொடர்ந்து இந்து மதம் குறித்து விமர்சிப்பதன் மூலம் கரண்ட் பெட்டியில் கை வைக்கும் வேலையைச் செய்கிறார் கமல் என்று திரைப்படம் மற்றும் நாடக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

Updated On : 5 நவம்பர், 2017 at 1:07 PM
பகிர்:

சென்னை: தொடர்ந்து இந்து மதம் குறித்து விமர்சிப்பதன் மூலம் கரண்ட் பெட்டியில் கை வைக்கும் வேலையைச் செய்கிறார் கமல் என்று திரைப்படம் மற்றும் நாடக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

கமல் தனது செய்கைகளின் மூலம் ஒரு மூன்றாந்தர அரசியலில் ஈடுபடுபவர் போல் நடந்து கொள்கிறார். வார இதழ் ஒன்றில் கேரள முதல்வர் பினராய் விஜயன் கேள்வி கேட்டு அதற்கு கமல் பதில் சொல்வது நகைச்சுவையாகத்தான் இருக்கிறது. இந்து தீவிரவாதம் என்ற ஒரு தவறான கற்பித்தல் அவருக்கு இருக்கிறது.

Advertisement

ஹாசன் என்று பெயர் வைத்து இருப்பதாலோ என்னவோ இந்துக்களுக்கு எதிரான மனோபாவம் அவருக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.  அவர் கேரளாவுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு எல்லாம் தமிழகம் தாழ்ந்து போய் விடவில்லை.

அப்படி கமலுக்கு கேரளாதான் பிடிக்கும் என்றால் அவர் கேரளாவிலேயே போய் வாழட்டும். சிலருக்கு சிறு வயதில் இருந்தே சில விஷயங்கள் பிடிபடாமல் இருக்கலாம். ஆனால் அதற்காக அவை தவறு என்று ஆகி விடாது.

பொதுவாக இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை. ஒழுக்கமான வாழ்க்கை என்பது நமது நடைமுறை. ஆனால் அந்த முறை தேவையில்லை; எப்படி வேண்டுமானாலும் இருப்பேன் என்பவர்களுக்கு இந்து மதம் பிடிக்காது.

தொடர்ந்து இந்து மதம் குறித்து விமர்சிப்பதன் மூலம் கரண்ட் பெட்டியில் கை வைக்கும் வேலையைச் செய்கிறார் கமல்  கமல்  தேவையில்லாத பிரச்சினைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இவ்வாறு எஸ்.வி.சேகர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.