தமிழ்நாடு

சென்னை கோயம்பேட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு!

DIN

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்பொழுது ஆய்வு செய்து வருகிறார்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வரும் சென்னையின் பிரதான பகுதிகளில் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் அதன் அருகில் அமைந்திருக்கும் மார்க்கெட்டும் அடங்கும்.

அங்கு அநேக இடங்களில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அத்துடன் சுகாதார வசதிகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் இந்த புகார்களின் அடிப்படையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்பொழுது ஆய்வு செய்து வருகிறார்.

அவருடன் அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் இந்த ஆய்வுப் பாணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT