தமிழ்நாடு

வைரஸ் காய்ச்சலுக்கு குழந்தை உயிரிழப்பு

DIN

ராசிபுரத்தை அடுத்துள்ள ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை வைரஸ் காய்ச்சலால்  வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
நாமக்கல் மாவட்டம்,  ராசிபுரத்தை அடுத்துள்ள ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் டிராக்டர் மெக்கானிக்காகப் பணிபுரிந்து வருகிறார்.  இவரது மனைவி ரேவதி.  இவர்களுக்கு அனுஷ்யா (2) ,   அஜய் (ஒரு வயது) ஆகிய இரு குழந்தைகள்.  
இந்நிலையில்,  குழந்தை அஜய் கடந்த 4 நாள்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு,  சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  பின்னர்,  தீவிர சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை அஜய் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தது.  மேலும், ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  4 பேர் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி

SCROLL FOR NEXT