தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை மிரட்ட வேண்டிய அவசியமில்லை: அமைச்சர் ஜெயக்குமார்
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை மிரட்ட வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை மிரட்ட வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள்தான் சகுனிவேலை செய்கின்றனர். போரூர் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தப்பிக்க முடியாது. குற்றவாளி தப்பிக்க முடியாத அளவிற்கு சட்ட அமைச்சகம் வழி செய்யும் என்றார்.
போரூர் சிறுமி ஹாசினி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.