முகப்பு
தமிழ்நாடு

தேர்தல் ஆவணங்களில் ஜெயலலிதா கைரேகை: தேர்தல் ஆணைய செயலர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு! 

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் போஸின் தேர்தல் ஆவணங்களில் ஜெயலலிதா கைரேகை இடம்பெற்றது தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணைய செயலர் நேரில் ஆஜராக... 

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:45 PM
பகிர்:

சென்னை:   திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் போஸின் தேர்தல் ஆவணங்களில் ஜெயலலிதா கைரேகை இடம்பெற்றது தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணைய செயலர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதி இடைதேர்தல்கள் நடைபெற்றது.  அப்பொழுது அதிமுக பொதுச் செயலாளர் என்கின்ற வகையில் வேட்பாளர்களுக்கான 'பார்ம் பி' படிவத்தில், அரசு மருத்துவர்கள் முன்னிலையில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது.

பின்னர் நடைபெற்ற தேர்தலில் திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் போஸ் வெற்றி பெற்றார். அப்பொழுது அவருக்கு எதிராக போட்டியிட்டு தோற்ற திமுகவின் சரவணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த  வழக்கு விசாரணை கடந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற்றது.

அப்பொழுது நீதிமன்றம், 'அதிமுக வேட்பாளர் போஸ் வேட்புமனுவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட 20 ஆவணங்களுடன், தலைமைத்தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆகஸ்ட் 24-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்' என்று உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி அந்த வழக்கில் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியும் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தேர்தல் ஆவணங்களில் ஜெயலலிதா கைரேகை இடம்பெற்றது தொடர்பான வழக்கில் தலைமைத் தேர்தல் ஆணையரின் முதன்மைச் செயலர், வரும் அக்டோபர் 6-ஆம் தேதி அன்று நேரில் ஆஜராக வேண்டுமென்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →