தமிழ்நாடு

ஸ்டாலின் தலைமையில் முக்கொம்புவில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணம் தொடங்கியது

DIN


திருச்சி: மு.க. ஸ்டாலின் தலைமையில் திருச்சி மாவட்டம் முக்கொம்புவில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணம் தொடங்கியது.

திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் தொண்டர்கள் ஏராளமானோர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் காவிரி உரிமை மீட்புப் பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

முக்கொம்புவில் நடந்த காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் துவக்க நிகழ்ச்சியில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கட்சித் தலைவர் கி. வீரமணி ஆகியோர் தொண்டர்கள் மத்தியில் பேசினர். 

காவிரி உரிமை மீட்புப் பயணத்தை வீரமணி தொடங்கி வைத்து, ஸ்டாலினுடன் பயணத்தில் பங்கேற்றுள்ளார். காவிரி உரிமை மீட்புப் பயணத்தை அறிவிக்கும் வகையில் கொடியேற்றிவிட்டு பயணம் தொடங்கப்பட்டது. காவிரி காரையோரமாகவே நடைபெற்று வரும் இந்த பயணத்தில், முன்னாள் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், மற்றும் ஏராளமான தொண்டர்களும் ஸ்டாலினுடன் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT