முகப்பு
தமிழ்நாடு

பிரதமருடன் ஆளுநர் சந்திப்பு: முக்கியப் பிரச்னைகள் குறித்து ஆலோசனை

தில்லிக்கு சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார். 

Updated On : 7 டிசம்பர், 2018 at 10:33 PM
பகிர்:


தில்லிக்கு சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார். 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தில்லிக்கு சென்றார். அவர் பிரதமர் மோடியை 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் ஆளுநர் சந்தித்தார். இந்த சந்திப்பு 30 நிமிடங்களுக்கு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது அவர் அரசியல் நிலவரம் குறித்து விளக்கியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் அண்மையில் கடுமையாக சேதமடைந்தன. இதை நேரில் சென்று பார்வையிட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சீரமைப்புப் பணிகளுக்கு முடிந்த உதவிகளை செய்வதாக உறுதியளித்திருந்தார். 

Advertisement

இந்நிலையில், அவர் பிரதமரை சந்தித்திருப்பதால் அது தொடர்பாக ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது. 

அதேசமயம், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் நேற்று கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாகவும் அவர் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தியிருக்கலாம்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.