மேக்கேதாட்டுவில் அணை கட்ட விரிவான அறிக்கை தயாரிக்க வழங்கிய அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
அவர் திருப்பூர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கஜா புயல் தாக்கிய டெல்டா மாவட்டங்களில் மக்கள் இன்னும் துயரத்தில் இருந்து மீளவில்லை. நிவாரணப் பணிகளை மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டும். மேக்கேதாட்டுவில் அணை கட்ட விரிவான அறிக்கை தயாரிக்க வழங்கிய அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார்.