வேலூர் சிறைக் கைதி தற்கொலை முயற்சி
வேலூர் சிறைக் கைதி தூக்க மாத்திரையை பயன்படுத்தி தற்கொலை முயற்சியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டார்.
வேலூர் சிறைக் கைதி தூக்க மாத்திரையை பயன்படுத்தி தற்கொலை முயற்சியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டார்.
கடந்த பிப்ரவரி 24, 2012 அன்று கொலைக் குற்றச்சாட்டு தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த சின்னபையன் என்பவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது 41 வயதாகும் கைதி சின்னபையன் 6 தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதன்காரணமாக மயக்கம் அடைந்தவரை சிறைத்துறை அதிகாரிகள் மீட்டு அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த சில நாட்களாக சின்னபையன் மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக வேலூர் போலீஸார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Advertisement