தமிழ்நாடு

காவிரி விவகாரம் குறித்து ரஜினி வாய் திறக்காதது ஏன்?: அமைச்சர் ஜெயக்குமார் 

DIN

காவிரி விவகாரம் குறித்து ரஜினி வாய் திறக்காதது ஏன்? என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ரஜினிகாந்த் என்ன பொறியியல் பட்டதாரியா?, பொறியியல் பட்டதாரிகள்தான் சிஸ்டம் சரியில்லை என்பார்கள்.

ஆன்மீகத்தின் மூலம் மதசார்புள்ள அரசை நிறுவ விரும்புகிறாரா என்பதை ரஜினி விளக்க வேண்டும். ஆன்மிக அரசியலை ரஜினி பேசிவிட்டு போகட்டும், அண்ணாவின் கொள்கைப்படி நாங்கள் செயல்படுவோம். 

தண்ணீர் கொடுக்க மறுக்கும் கர்நாடகா சென்று சிஸ்டத்தை ரஜினி சரிசெய்ய வேண்டும். காவிரி விவகாரம் குறித்து ரஜினி வாய் திறக்காதது ஏன்?. அதிமுகவில் உள்ள 1.5 கோடி பேரும் வீரம் மிக்க புலிகள். தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முன்னதாக நேற்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ரஜினி, “தமிழகத்தில் தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT