அடுத்த மாத மத்தியில் அடுத்தகட்ட பயணம் மேற்கொள்வேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது புதிய கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் பெயரை மதுரையில் புதன்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். மேலும் அக்கட்சியின் கொடியையும் நற்பணி இயக்கத்தினர் முன்னிலையில் அவர் ஏற்றினார். அக்கொடியில் சிகப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ஆறு கைகள் இணைந்தபடியும், நடுவில் நட்சத்திரம் ஒன்றும் இருந்தது.
இதுகுறித்து கமல்ஹாசன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
எனது கட்சியில் திராவிடத்தையும் இழக்கவில்லை, தேசியத்தையும் இழக்கவில்லை. ஆட்சியாளர்கள் செய்ய தவறியதை செய்வதே எங்களது கொள்கை. நேற்று கூடிய கூட்டம் சினிமா நட்சத்திரத்தை பார்க்க வந்த கூட்டம் அல்ல. கட்சியின் பெயர் மற்றும் லோகோ என்ஜிஓ பாணியில் இருப்பதில் என்ன தவறு?.
மக்கள் நீதி மய்யத்தில் நிறுவனத்தலைவர் என்ற ஒரு பொறுப்பு உருவாக்கப்படும். அரசு ஒத்துழைக்காவிட்டாலும் தத்தெடுக்கும் கிராமங்கள் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாத மத்தியில் அடுத்த கட்ட பயணம் மேற்கொள்வேன் என்றார்.