தமிழ்நாடு

118 அடியைக் கடந்த மேட்டூர் அணை: 20 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

118 அடியைக் கடந்து நிரம்பி வரும் மேட்டூர் அணை, முழுக்கொள்ளளவை எட்டினால் மொத்த உபரி நீரும் தொடர்ந்து விடுவிக்கப்படவுள்ளது.

DIN

118 அடியைக் கடந்து நிரம்பி வரும் மேட்டூர் அணை, முழுக்கொள்ளளவை எட்டினால் மொத்த உபரி நீரும் தொடர்ந்து விடுவிக்கப்படவுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த கன மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின.  இதனால் இரு அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. 

இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 64,595 கன அடியில் இருந்து 61,644 கன அடியாகச் சரிந்தது. 

இருப்பினும் சனிக்கிழமை காலை 114.63 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 118 அடியாக உயர்ந்தது. மேலும் விரைவில் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் நீர் இருப்பு 88.73 டி.எம்.சியாக உள்ளது. இதனிடையே அணை நிரம்பினால் மொத்த உபரி நீரும் திறக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

கர்நாடகத்தில் மிதமான நிலநடுக்கம்!

கனவுகளுக்காக போராடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கதை | Women Cricket World Cup

SCROLL FOR NEXT