ஜயேந்திரருக்கு இரங்கல்
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சித்தியடைந்ததை அடுத்து அவரது மறைவுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் வேதாந்தம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சித்தியடைந்ததை அடுத்து அவரது மறைவுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் வேதாந்தம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், 'ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஏழை, எளிய மக்களின் மேல்
மிகவும் பரிவு கொண்டவர். சேரிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தவர்.
பல கோயில்களைக் கட்டியும், அவற்றுக்கு தேவையான பொருளாதார உதவிகளையும் செய்த ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் இழப்பு ஹிந்து சமுதாயத்துக்குப் பேரிழப்பாகும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.