முகப்பு
தமிழ்நாடு

திருவண்ணாமலையில் சுவர் இடிந்த விபத்தில் 3 பேர் சாவு

திருவண்ணாமலையில் கட்டிடம் இடிந்த விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Updated On : 2 மார்ச், 2018 at 6:40 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:53 PM

திருவண்ணாமலையில் உள்ள திருவூடல் தெருவில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான பழைய கட்டிடம் ஒன்றை இடித்து மருத்துவமனை கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. 

அப்போது அருகிலிருந்த பழமையான பில்லூரார் மடத்தின் கட்டிடச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், அங்கு பணியாற்றி ரமேஷ், அலமேலு, லட்சுமணன் ஆகிய 3 தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதனால் இடிபாடுகளில் இருந்து 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Advertisement

அதில், போதிய முன்னேற்பாடு இல்லாமல் இருந்ததே இவ்விபத்துக்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.