தமிழ்நாடு

திருவண்ணாமலையில் சுவர் இடிந்த விபத்தில் 3 பேர் சாவு

திருவண்ணாமலையில் கட்டிடம் இடிந்த விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Raghavendran

திருவண்ணாமலையில் உள்ள திருவூடல் தெருவில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான பழைய கட்டிடம் ஒன்றை இடித்து மருத்துவமனை கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. 

அப்போது அருகிலிருந்த பழமையான பில்லூரார் மடத்தின் கட்டிடச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், அங்கு பணியாற்றி ரமேஷ், அலமேலு, லட்சுமணன் ஆகிய 3 தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதனால் இடிபாடுகளில் இருந்து 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அதில், போதிய முன்னேற்பாடு இல்லாமல் இருந்ததே இவ்விபத்துக்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!

SCROLL FOR NEXT