தமிழ்நாடு

என் சிந்தனை வளர்ந்த வீடு: பெரியார் நினைவு இல்லத்தில் கமல் உருக்கம்! 

DIN

ஈரோடு: என் சிந்தனை வளர்ந்த வீடு இது என்று ஈரோட்டில் அமைந்துள்ள  பெரியார் நினைவு இல்லத்தினைப் பார்வையிட்ட பிறகு விருந்தினர் குறிப்பேட்டில் நடிகர் கமல் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தற்பொழுது ஈரோட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தனது சுற்றுபயணத்தின் ஒருபகுதியாக, ஈரோட்டில் அமைந்துள்ள  பெரியார் நினைவு இல்லத்தினை அவர் ஞாயிறு காலை பார்வையிட்டார்.

அப்பொழுது அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பெரியார் பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள விருந்தினர் பதிவேட்டில் அவர், “என் சிந்தனை வளர்ந்த வீடு இது, அவர் சிந்தனை இங்கே வளர்ந்த காரணத்தினால் - அன்புடன் கமல்ஹாசன்” என எழுதி கையெழுத்திட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT