முகப்பு
தமிழ்நாடு

இன்று திமுக அவசர செயற்குழு

காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

Updated On : 30 மார்ச், 2018 at 1:31 AM
பகிர்:

காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரக் காலத்துக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான அவகாசம் வியாழக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. 
இந்த நிலையில், திமுக அவசரச் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கூட உள்ளது. 
கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில், ஆலோசிக்கப்பட உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.