கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இவ்விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு தரப்பினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர் கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படவில்லை. தமிழக உரிமைகளை நிலைநாட்டுவதற்கு 100% பாஜக அரசு உறுதுணையாக இருக்கும். தீர்ப்பின் முக்கிய பகுதிகளில் ஸ்கீம் என்றுதான் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஸ்கீம் என்பது பற்றி உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியிருந்தால் பிரச்னையில்லை.
Advertisement
ஆளுங்கட்சியின் விருப்பப்படி கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தால் அது தேர்தலே அல்ல. முறைப்படி நடந்தால் மட்டுமே அது தேர்தல். கூட்டுறவு சங்க தேர்தல் என்பது வருத்தத்தக்க வகையில் உள்ளது. நடிவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.